சென்னை, ஜூன் 14- மருத்துவக் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மற்றும் கடன் வாங்கியவரிடம் வலுக்கட்டாயமாக வசூல் செய்தால் 3 ஆண்டு சிறைத் தண்டனை உள்ளிட்ட 5 சட்ட முன் வடிவுகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
சிறைத் தண்டனை
சட்ட முன் வடிவுகளை நிறைவேற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கும், ஆளு நருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட் டது. எனவே தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஆளுநரிடம் இருந்த 10 சட்ட முன் வடிவுகளுக்கும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதேபோல் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்ட முன் வடிவுகளுக்கு அதிகபட்சமாக 3 மாதங்களில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதேபோல் குடியரசுத்தலைவர்க்கும் காலக்கெடு விதித்தது.
இந்த தீர்ப்பை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்ட முன் வடிவுகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்து வருகிறார். அந்த அடிப்படையில் கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்டு, அவ ருக்கு அனுப்பட்டு இருந்த சட்ட முன் வடிவுகளில் 5 சட்ட முன் வடிவுகளுக்கு ஆளுநர் நேற்று (13.6.2025) ஒப்புதல் அளித்தார்.
அதில் 2 சட்ட முன் வடிவுகள் மிக முக்கியமானவை ஆகும்.
முதல் சட்ட முன்வடிவு
முதலாவது, தமிழ்நாடு பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள் (கடும் வசூல் நடவடிக்கை தடுப்பு சட்டம் 2025). இந்தச் சட்டத்தின்படி கடன் வாங்கியவர் மற்றும் அவரது குடும்பத்தினரை அதாவது அவரின் பெற்றோர், கணவர் அல்லது மனைவி, குழந்தைகள் ஆகியோரை கடன் வழங்கிய நிறுவனமோ அல்லது அதன் முகவரோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தக்கூடாது.
ரூ.5 லட்சம் அபராதம்
மேலும் அவர்களுக்கு இடையூறு, வன்முறையை பயன்படுத்துதல், அவமதித்தல், மிரட்டுதல், அவர்கள் போகுமிடங்களில் பின்தொடர்தல், அவர்களுக்கு சொந்தமான அல்லது பயன்படுத்தும் சொத்துகளில் தலை யிடுதல், அதை பயன்படுத்த முடியாமல் இடையூறு செய்தல், அந்த சொத்துகளை பறித்துக்கொள்ளுதல், அவரது வீடு, வசிக்குமிடம் வேலை அல்லது தொழில் செய்யும் இடம் ஆகிய இடங்களுக்குச் செல்வது, பேச்சுவார்த்தை நடத்த அல்லது கடனை வசூலிக்க, தேவையற்ற செல்வாக்கைப் பயன்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குற்றமாக கருதப்படும்.
இந்தக் குற்றங்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கப்படும். வெளி ஏஜென்சி களை பயன்படுத்துதல், ஆவணங்களை எடுத்தல் போன்ற குற்றங்களுக்காக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
குற்றம்
நிரூபிக்கப்பட்டால்…
நிரூபிக்கப்பட்டால்…
கடன் பெற்றவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர் யாராவது தற்கொலை செய்து, அது, கடன் வழங்கிய நிறுவனம் அல்லது முகவரின் வலுக்கட்டாய நடவடிக்கையால் நேரிட்டதாக நிரூபிக்கப்பட்டால் அது பாரதிய நியாய சன்ஹிதாவின் 108 ஆம் பிரிவின் கீழ் குற்றமாகக் கருதப்படும். அதாவது அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை அல்லது வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். இந்த சட்ட முன் வடிவு, குறிப்பாக ஏழை தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்ட பலர் மீது நடக்கும் இந்த கொடு மைகளை நிறுத்ததான் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இரண்டாவது
சட்ட முன்வடிவு
சட்ட முன்வடிவு
இரண்டாவது சட்ட முன் வடிவு, தமிழ்நாட்டில் பல்வேறு குற்ற நடவ டிக்கைகளில் ஈடுபடுவோர்கள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது. அந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, அதில் மருத்துவக் கழிவுகளை கொட்டுவோர்களும் சேர்க்கப்பட்டு உள்ளனர். அதன்படி இனி உயிரி-மருத்துவக் கழிவுகளை (பயோ மெடிக்கல் வேஸ்ட்) முறையற்று குவித்து பொது சுகாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் கடும் அபாயத்தை ஏற்படுத்துவோரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.
வெளிமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டில் வந்து மருத்துவக் கழிவுகளை கொட்டுவோருக்கும் இது பொருந்தும். எனவே, மருத்துவக் கழிவுகளை இனி கண்டபடி கொட்டக்கூடாது. முறைப்படி அகற்ற வேண்டும்.
இதுதவிர தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட சட்ட முன் வடிவு, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் சட்ட முன் வடிவு மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு திருத்தச் சட்ட முன் வடிவு ஆகியவற்றுக்கும் ஆளுநர்
ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.