மேற்கு வங்கத்தில் நாய்களை அலங்கரித்து வழிபாடாம்

1 Min Read

சிலிகுரி,நவ.13- விலங்குகளில், மனிதர் களின் சிறந்த நண்பர்களாக நாய்கள் உள்ளன. அவற்றிற்காக ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த மக்கள் பூஜைகள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்காளத்தில் சிலிகுரி நகரில் குகுர் திகார் அல்லது குகுர் பூஜை என்ற பெயரில் நாய்களுக்கான கொண்டாட்டங்கள் நடந்துள்ளன. இதில், அந்த பகுதியை சேர்ந்த மக்கள் வளர்ப்பு நாய்கள் என்றில்லாமல் தெரு நாய்களையும் காலையிலேயே குளிக்க வைத்து, அவற்றை அலங்கரித்து, சிறப் பாக சமைக்கப்பட்ட நிறைய உணவு களையும் வழங்கினர்.

இதுபற்றி விலங்குகளுக்கான உதவி மய்யத்தின் உறுப்பினரான பிரியா ராய் கூறும்போது, 

“அதிக உற்சாகத்துடன் குகுர் திகார் விழா கொண்டாடப்பட்டது.  தெரு நாய்களை நாங்கள் வழிபட்டோம். தெரு நாய்களுக்கு மதிப்பளித்து, உங்கள் பகுதிகளுக்கு உட்பட்ட இடங் களில் அவற்றுக்கு உணவளிக்க வேண் டும் என வேண்டுகோளாக நான் கேட்டு கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *