அயோத்தி ராமன் பாதையில் தடையை மீறி மதுக்கடைகள் பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜூன் 13 உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் சிறீராமன் கோயிலுக்குச் செல்லக் கூடிய ராமன் பாதையில் தடையை மீறி மதுக்கடைகள் செயல்படுகின்றன; மாநில பாஜக அரசின் ஒத்துழைப்புடன் இந்தக் கடைகள் இயங்குவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக, உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவா் அஜய் ராய், டில்லியில் செய்தியாளா்களிடம் நேற்று (12.6.2025) கூறியதாவது:

அயோத்தி குறித்து உத்தரப்பிரதேச அரசு மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவிக்கும் தகவல்களும், கள நிலவரமும் வேறாக உள்ளது.

மதுக்கடைகள்

அயோத்திக்குச் செல்லும் ராமன் பாதையின் 13 கி.மீ. சுற்றளவில் மது விற்பனைக்குத் தடை விதித்து, மாநக ராட்சி செயற்குழு கடந்த மே 1 ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால், ராமன் பாதை மட்டுமன்றி சிறீராம ஜென்ம பூமியின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மதுக் கடைகள் செயல்பட்டு வரு கின்றன.

மாநில அரசின் ஒத்துழைப்புடன் இக்கடைகள் செயல்படுகின்றன. வருமானத்துக்காக மதுக்கடைகளைத் திறக்க மாநில அரசு அனுமதித்துள்ளது. இது, ‘புண்ணிய’ நகரான அயோத்திக்கு அவமதிப்பாகும்.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

ராமன் பாதை அருகே மதுக்கடைகள் அனுமதிக்கப்பட்டது ஏன்?, இந்தக் கடைகள் அரசிடம் எவ்வாறு ஒப்புதல் பெற்றன? உரிமங்கள் வழங்கிய அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் படுமா?

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் கூட்ட நெரி சல்களில் உயிரிழந்தோா் எண்ணிக் கையை மாநில அரசு குறைத்துக் காட்டுவதாக பிபிசி செய்தையில் கூறப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலில் 37 பேர் உயிரி ழந்ததாக மாநில அரசு உறுதி செய்த நிலையில், 82 போ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விஷயத்தில், மாநிலத்துக்கும் நாட்டுக்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத் பொய் கூறுவது தெளிவாகியுள்ளது. இதுதான், பாஜக வின் உண்மை முகம்.

இவ்வாறு  அஜய் ராய் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *