திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், கீழப்பாலையூருக்கு 7.06.25 அன்று மாவட்ட விவசாயத் தொழிலாளரணிச்செயலாளர் தோழர் க.வீரையன் – ஈ.வி.ஆர்.எம்.அசோக்மணி இல்லத்தை திராவிடர் கழத்தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்து பேசிய போது” இங்கு வந்தவர்கள் என்னை ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் நான் இந்த பகுதிக்கு (குடவாசல்,கீழப்பாலையூர்) ‘வரும் போது வயதானவனாக வந்தேன். போகும் போது இளைஞனாக செல்கிறேன்’ என்று உருக்கமாகப் பேசினார். இந்தப்பேச்சை வந்திருந்த தோழர்களும், மக்களும் ரசித்துக்கேட்டனர். இந்த வயதிலும் ஆசிரியர் சூறாவளியாய் சுற்றி வருகிறாரே என்று அனைவரும் நெகிழ்ச்சியோடு பேசிக் கொண்டனர்.
– காரை.புரட்சிமணி
போகும் போது இளைஞனாக செல்கிறேன்! ஆசிரியரின் உருக்கமானப் பேச்சு
Leave a Comment