அறிய வேண்டிய பெரியார்

viduthalai
5 Min Read

சுயராஜ்யமா? சுயமரியாதையா?

தமது நாட்டிலுள்ள பொதுமக்கள் ஒருவருக் கொருவர் தங்கள் சூழ்ச்சிகளாலும், தந்திரங்களினாலும் ஒருவரையொருவர் இழிவுபடுத்தியும், அடிமைப் படுத்தியும் கொடுமை செய்து வருவதன் பலனாய் அன்னிய அரசாங்கத்தின்கீழ் ஆளப்பட்டு துன்ப மடைந்து வருகிறோம். இத்துன்பம் நமக்கு ஒழியவேண்டுமானால் நாம் பிறருக்குச் செய்யும் துன்பம் ஒழியவேண்டும். அன்னிய அரசாங்கத்தார் நமக்குச் செய்யும் கொடுமையை ஒரு தட்டில் வைத்து, தம் நாட்டில் சிலர் நமக்குச் செய்யும் கொடுமையையும், நம்மைக்கொண்டு மற்றவர்களுக்குச் செய்யச் செய்யும் கொடுமையையும் ஒரு தட்டில் வைத்துத் தூக்கிப் பார்த்தால் அரசாங்கத்தின் கொடுமையைவிட நம்மவர்களின் கொடுமையே பெரிய பளுவானதாயிருக்கும்.

நமது நாட்டில் சில வேஷக்காரர்கள், சுயராஜ்யம் என்கிற பதமும், சுதந்திரம் என்கிற பதமும், உரிமை என்கிற பதமும் வாழ்க்கையை உத்தேசித்து வாயளவில் பேசி, பொது ஜனங்களை ஏமாற்றி, நகத்தில் அழுக்குப்படாமல் காலங்கழிக்க பார்க்கின்றார்களேயல்லாமல், அதற்காகச் செய்யவேண்டிய காரியங்களில் தங்களுக்குச் செய்ய யோக்கியதை இல்லாவிட்டாலும், வேறு யாராவது செய்தாலும் தங்களுக்கு யோக்கியதை குறைந்து போகுமே என்கிற பயத்தால், அதற்கு வேண்டிய முட்டுக்கட்டைகளைப் போட்டுத் தாங்களே முன்னணியிலிருக்கவேண்டிய மாதிரியில் இராஜீயவாதிகளென்னும் பெயரால் வாழ்ந்து வருகின்றார்கள். நமது நாட்டுக்கு முக்கியமாக வேண்டியது சுயராஜ்யமா? சுயமரி யாதையா!

சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று சொல்லி ஜனங்களை ஏமாற்றிப் பிழைக் கின்ற அனேகர், சுயராஜ்யம் இன்னதென்பதைப்பற்றி ஒரு வார்த்தையாவது சொன்னவர்களல்லர். அதை ஜனங்கள் அறியாதிருக்கும்படி எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்து வருகின்றார்கள். மகாதீமா காந்தி அவர்கள் சுமார் அய்ந்து வருடங்களுக்கு முன்பாக சென்னைக்கு வந்திருந்த சமயம் ஓர் கூட்டத்தில் பேசும்போது, ‘என்னுடைய சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள யோக்கியதை இல்லாமலிருக்குமானால் நான் சுயராஜ்யத்தை விரும்புவதில் அர்த்தமேயில்லை’ என்று சொல்லியிருக்கிறார்.

மனிதனுக்கு அவனுடைய சுயமரியாதை என்னும் தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளுவதுதான் பிறப்புரிமையேயல்லாமல், அரசியலான இராஜீய மென்னும் சுயராஜ்யம் ஒருகாலும் பிறப்புரிமையாக மாட்டாது. இராஜீய பாரமானது ஒரு தொண்டு.

சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று சொல்லி ஜனங்களை ஏமாற்றிப் பிழைக் கின்ற அனேகர், சுயராஜ்யம் இன்னதென்பதைப்பற்றி ஒரு வார்த்தையாவது சொன்னவர்களல்லர். அதை ஜனங்கள் அறியாதிருக்கும்படி எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்து வருகின்றார்கள். மகாதீமா காந்தி அவர்கள் சுமார் அய்ந்து வருடங்களுக்கு முன்பாக சென்னைக்கு வந்திருந்த சமயம் ஓர் கூட்டத்தில் பேசும்போது, ‘என்னுடைய சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள யோக்கியதை இல்லாமலிருக்குமானால் நான் சுயராஜ்யத்தை விரும்புவதில் அர்த்தமேயில்லை’ என்று சொல்லியிருக்கிறார். 

வீதி கூட்டுவதும், விளக்குப் போடுவதும், காவல் காப்பதும் எப்படிச் சேவையாயிருக்கிறதோ, அதுபோலவே இராஜீய பாரமென்பதும் ஒரு சேவைதான். தேசத்தில் அவனவனது வாழ்க்கைக்கும் அல்லது பொது நன்மைக்கும் எப்படிப் பல தொழில்கள் இருக்கின்றனவோ, அதுபோல் இராஜீய பாரமென்பதும் ஒரு தொழில்தான். இத்தொழிலை இன்னார்தான் செய்யவேண்டுமென்றாவது, இன்னாருக்குத்தான் உரிமையென்றாவது கடவுள் என்பவரால் யாருக்கும் பிரித்துக் கொடுக்கப்படவில்லை. மனிதராகப் பிறந்தவர்கள் எல்லோரும் ஊமை, கூன், குருடு, செவிடு உட்பட அதற்கு அருகர்கள்தாம். ஆதலால், அவ்வுரிமையை எல்லோரும் சமமாய் அடையவேண்டியதுதான். ஆனபோதிலும், மனித ஜென்மத்திற்கு இக் கேவலஆட்சியைப் பிறப்புரிமை என்று சொல்லமுடியாது. மனிதனுக்கு உண்மையான பிறப்புரிமை என்று சொல்வது அவனது சுயமரியாதையும், பரோபகாரமென்பதுதான்.

சுயமரியாதை இல்லாத ஒரு மனிதனுக்கு சுயராஜ்யம் அவசியமே இல்லாததாகும். சுயராஜ்யம் இல்லாத எந்த மனிதனுக்கும்கட்ட சுயமரியாதை என்பது அவசியமாளதே வாகும். சுயமரியாதையற்றவனை பிணமென்றுநான் சொல்லவேண்டும்.அப்படிப் கின்றபோது, நமது தேசத்தில் சுயமரியாதை அற்ற பூச்சி, புழுக்கன்போலும், நா பன்றிகள்போலும், பிராசுகள், அரக்கர்கபோலும் வாழுக ஜனங்கள் கோடிக்கணக்காய் திருக்கின்றனர்; இலட்சக்கணக்காய் தினமும் பிறக்கின்றனர். இச் சமூகத்திற்கு சுயராஜ்யம் எதற்கு

உதாரணமாக, மனித உடல் தாங்கிய ஒருவன், அவனுடைய தெய்வத்தைக் காண தரிசிக்க உரிமையற்ற ஒருவன், எப்படிச் சுயரியாதை யுள்ளவனாவான்! அந்தச் சமூகத் திற்கு சுயராஜ்யம் எதற்கு ? எந்த இராஜ்பமிருந்தால்தான் அவர்களுக்குக் கல்லை என்ன! இம்மாதிரி, ஓர் சமூகத்தாரை ஒடுக்கிச் சுயமரியாதையற்று வைதி திருக்கும் ஒருஇராட்ச சமூகத்தார் சுயராஜ்யமடைவது, மற்ற சமூகங்களுக்கு நன்மையைத் தருமா! அல்லது, ஒடுக்கப்பட்ட வகுப்பாருக்கும் சேர்ந்துதான் சுயராஜ்யம் தேடுவது என்று சொல்லுவோ மானால், அவர்கள் தங்கள் தெய்வங்களைக் காணவும், தரிசிக்கவும் முடியாதபடியும், தெருவில் நடக்கவும், கண்ணில் தென்படவும் முடியாதபடியும் வைத்திருப்பதற்குக் காரணம் சுயராஜ்யம் இல்லாமைதானா?

அன்னிய இராஜ்பம் நமது ஜனங்களை இம்மாதிரிக் கொடுமையாக நடத்தும்படி நமக்குச் சொல்லவே இல்லை. எந்தக் காரணத்தைக் கொண்டோ அன்னிய இராஜிய பாரங்கள் நமது நாட்டிற்கு ஏற்படாமலிருந்திருக்குமேயானால், இந்தச் சுயமரியாதை இன்னதென்று உணருவதற்குக்கூட நமக்குச் சவுகரியம் கிடைத்திருக்காது. நமது நாட்டு மக்களின் சுயமரியாதைக்கு விரோதமாயிருப்பது, நம் நாட்டார் சிலரின் ஆதிக்கத்தினாலே யல்லாமல், அன்னிய அரசாங்கத்தின் ஆதிக்கத்தினாலல்ல. ஆனால், நமது நாட்டில் பெரும் பாலோர் சுயமரியாதையற்றிருக்குந் தன்மை. அன்னிய அரசாங்கத்தாருக்கு அனுகூலமா யிருப்பதனால் இக் கொடுமைகளைப் போக்க அவர்களுக்கு அதிகக் கவலையில்லை.

ஆனபோதிலும், அவர்களுடைய தத்துவம் ஒருநாளும் இவ்வித சுயமரியாதைக் கேடுக்கு அனுகூலமாயிருப்பதில்லை. ஒரு தேசம் சுதந்திரமடைய வேண்டும் என்ற உண்மையான கவலை இருக்குமானால், அக் கவலைக்கு அவர்கள் அருகர்களா, இல்லையா என்பதைப் பரீட்சிக்கவேண்டுமானால் அவர்கள் சுயமரியாதை உள்ளவர்களா, இல்லையா என்பதிலிருந்துதான் அவர்களுடைய அருகதை வெளிப்படும்.

அஃதில்லாமல், சுதந்திரத்திற்காகச் செய்யப்படும் எவ்வித முயற்சிகளும் தனிப் பட்டவர்கள் வயிற்றுப் பிழைப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் சுய மரியாதையில்லாத நிலைமையைப் பலப்படுத்தவும்தான் ஆகுமேயல்லாமல், வேறொன்றுக்கும் உதவாது. அதை உத்தேசித்தேதான் மகாத்மா காந்தியும் சுதந்திரம் பெறுவதற்காக ஏற்படுத்திய திட்டங்களையே சுயமரியாதை அடைவதற்கான திட்டங்களாகப் போட்டு விட்டார். தீண்டாமை ஒழிய வேண்டுமென்று சொல்வதும், கதர் அணியவேண்டுமென்று சொல்வ தும் நம் நாட்டு மக்களின் சுயமரியாதையின் ஜீவ நாடிகள். ஒரு மனிதனை மற்றொரு மனிதன் தெருவில் நடக்கவும், பக்கத்தில் வரவும், கண்ணில் தென்படவும், அவனது தெய்வத்தைக் கண்டு தரிசிக்கவும் முடியாதபடி வைத்திருக்கிற வரையில், சுயமரியாதை இல்லையென்றும், அப்படிப்பட்டவனுக்குச் சுதந்திரமென்பது அர்த்தமில்லாத வார்த்தை என்றும்,ஒரு மனிதன் தன்னுடலில் போதிய அளவு சக்தியிருந்தாலும் ஜீவனத் திற்கு வேண்டிய அளவு தொழிலில்லாமல் வைத்திருப்பதனால் அவன் எவ்விதத்திலும் சுயமரியாதையோடு வாழ முடியாதென்றும், ஜீவனத்திற்காக எப்படியாவது தன்னுடைய சுயமரியாதையை இழக்கத்தான் நேரிடுமென்றும் கருதியே பெரும்பான்மையான ஏழை களுக்கு ஜீவனோபாயத்திற்கு ஆதாரமான கதரையும் வற்புறுத்தி வந்தார். மற்றவர்களை

அடிமைப்படுத்தி வைத்திருப்பதினாலேயே வாழமுடியும் என்கிற நிலைமையடைந்த நமது நாட்டிலுள்ள ஒரு சமூகத்தார், இத்திட்டத்தை அடியோடு ஒழித்து, பழையபடி தங்களுடைய ஆதிக்கத்தைப் பலப்படுத்திக் கொள்ளத் தகுந்த மாதிரியில் ஜெயம் பெற்று வருகிறார்கள்.

இந்நிலைமையில் ‘சுதந்திரம்’, ‘சுயராஜ்யம்’, ‘உரிமை என்கின்ற வார்த்தைகள் தேச ஜனங்களுக்குப் பெரிய இழிவுக்கும், கொடுமைக்கும் ஆதாரமானவைதான். ஆதலால், நமது தேசம் உண்மையான உரிமை அடையப் பாடுபட வேண்டுமானால், மக்களின் சுய மரியாதைக்காகத்தான் முதலில் பாடுபடவேண்டும்.

(குடி அரசு – தலையங்கம் -24-1-1926)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *