மராட்டியத்தில் 1 ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு ராணுவ பயிற்சியாம்

1 Min Read

மும்பை, ஜூன்.4- பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுடன் சமீபத்தில் நடந்த போர் இந்தியர்கள் இடையே தேசப்பற்றை தூண்டியது.

இந்தநிலையில் சிறுவயது முதல் மாணவர்களிடம் தேசப்பற்றை ஊட்டும் வகையில் பள்ளி மாண வர்களுக்கு அடிப்படை ராணு வப் பயிற்சி வழங்கப்படும் என்று மராட்டிய அரசு அறிவித்து உள்ளது.

இதுகுறித்து அந்த மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ததா புசே நேற்று (3.6.2025) மும் பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மராட்டியத்தில் 1-ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு ராணு வத்துக்கான அடிப்படை பயிற்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மாணவர் களிடம் தேசப்பற்றை வளர்க் கவும், உடற்பயிற்சி வழக்கத்தை ஏற்படுத்தவும், ஒழுக்கத்தை வளர்க்கவும் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

இந்த திட்டத்துக்கு முதல மைச்சர் தேவேந்திர பட்னா விஸ் சாதகமான பதிலை தெரி வித்துள்ளார். இதனை செயல் படுத்துவதற்காக உடற்கல்வி ஆசிரி யர்களுடன் 2 லட்சத்து 50ஆயிரம் மேனாள் ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *