ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படுகிறது

1 Min Read

 

புதுடில்லி, ஜூன் 4– டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா, வீட்டில் கடந்த மார்ச் மாதம் தீவிபத்து ஏற்பட்டபோது, பண மூட்டைகள் கட்டுக்கட்டாக எரிந்து நாசமானது. இதையடுத்து அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. உச்சநீதிமன்றம் நியமித்த குழு அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதற்கிடையே அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்த யஷ்வந்த் வர்மா, பதவியிலிருந்து விலக செய்ய வற்புறுத்தப்பட்டது. ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார்.  இதையடுத்து அப்போது உச்சநீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜீவ் கன்னா, யஷ்வந்த் வர்மாவின் பதவி நீக்கத்திற்கான நடவடிக்கைகளை எடுக்க குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுதினார். இந்த நிலையில் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் அரசுத் தரப்பில் கொண்டுவரப்படும் என்று தெரிகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *