கல்வித்தரம் உயர்ந்த சாதனையால் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இருமடங்காக அதிகரிப்பு

1 Min Read

சென்னை, ஜூன் 3– 10ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பில் அதிக எண்ணிக்கையில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மாணவர்கள் தேர்ச்சி பெற்ற தொடர் சாதனைகளால் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது.

கோடை விடுமுறை முடிந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று (2.6.2025) திறக்கப்பட்டன. பள்ளிக்கு உற்சாகமாக வந்த மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர். அடுத்த வகுப்பிற்கு செல்லும் பயம் கலந்த மகிழ்ச்சி, நண்பர்களை சந்தித்த மகிழ்ச்சி என மாணவர்களின் பல உணர்வுகள் வெளிப்பட்டது.

மேலும் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதனிடையே, சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு 6 ஆயிரம் மாணவர்கள் புதியதாக சேர்ந்த நிலையில், இந்தாண்டு 16,490 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

அதிகபட்சமாக LKG, UKG-யில் 7,500 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் இதற்கு காரணமாக கூறுவது, படிக்கும் மாணவர்களுக்கு சலுகைகள் தாராளமாக வழங்குவது,  தனியார் பள்ளிகளுக்கு நிகராக கட்டமைப்பு, கல்வி அதே போல் தொடர்ச்சியாக மாணவர்களின் சாதனைத்தேர்ச்சி போன்ற காரணங்களால் சென்னை மாநகராட்சிபள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *