உச்சநீதிமன்றத்தில் மூன்று புதிய நீதிபதிகள் பதவியேற்பு

1 Min Read

புதுடில்லி, மே 31 உச்சநீதிமன்றத்திற்குப் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகள் நேற்று (30.5.2025) பதவி யேற்றுக் கொண்டனர். அவர்களுக்குத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களில் பணியாற்றி வந்த 3 நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலீஜியம், ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தது.

அந்தவகையில் கருநாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.அஞ்சரியா, கவுகாத்தி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துர்கர் ஆகிய 3 பேரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்குமாறு கடந்த 26 ஆம் தேதி பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரையை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டது.

நீதிபதிகள் என்.வி.அஞ்சரியா,
விஜய் பிஸ்னோய், சந்துர்கர்

அதன்படி மேற்படி 3 நீதிபதிகளையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 29.5.2025 அன்று உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நீதிபதி கள் என்.வி.அஞ்சரியா, விஜய் பிஸ்னோய், சந்துர்கர் ஆகிய 3 பேரும் நேற்று (30.5.2025) உச்சநீதிமன்ற நீதிபதி களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.

உச்சநீதிமன்றத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், புதிய நீதிபதிகள் 3 பேருக்கும் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பதவிப்பிரமாணம் செய்து வைத்து வாழ்த்தினார். புதிதாக பதவியேற்றுள்ள 3 பேரையும் சேர்த்து, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தனது முழு பலத்தை உச்சநீதிமன்றம் மீண்டும் எட்டியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *