கும்பகோணம், மே 28– ஜூன் 7 கும்பகோணத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெறும் “சுயமரியாதை இயக்கம்” நூற்றாண்டு “குடிஅரசு” நூற்றாண்டு சிந்தனை செயலாக்க கருத்தரங்கம் ஏற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருவிடைமருதூர், திருநாகேஸ் வரம், பவுண்டரிகபுரம், கல்யாண புரம், கும்பகோணம், பாபநாசம், கபிஸ்தலம், அய்யம்பேட்டை பகுதிகளுக்கு சென்று கழக பொறுப்பாளர்களை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து கழகத் தோழர்கள் குடும்பமாக பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன
தொடர்ந்து குடந்தை சட்ட மன்ற உறுப்பினர் க.அன்பழகன், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ. ராமலிங்கம், கும்பகோணம் துணை மேயர் சுப.தமிழழகன் ஆகியோரை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து கருத்தரங்கத்திற்கு அழைப்பு விடுத்தோம். மகிழ்வுடன் பெற்றுக் கொண்டு பங்கேற்பதாக உறுதி அளித்தனர் முழு ஒத்துழைப்பு தருவதாகவும் கூறினர். உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் மற்றும் மாவட்ட செயலாளர் சு.கல்யாணசுந்தரம் ஆகியோர் சென்னையில் இருப்பதால் அவர்கள் அலுவலகத்தில் அழைப்பிதழ் கொடுத்து தொலைபேசியில் தகவலை தெரிவித்தோம் கருத்தரங்கம் சிறப்புடன் நடைபெற விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
கும்பகோணம். மாவட்ட தலைவர் வழக்குரைஞர் கோமதி, கும்பகோணம் மாவட்ட செயலாளர் உள்ளிக்கடை சு.துரை ராசு, குடந்தை க.குருசாமி, தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் எம்.என்.கணேசன், கும்பகோணம் மாநகரத் தலைவர் வழக்குரைஞர் ரமேஷ் ஆகியோர் உடன் வருகை தந்தனர்.