இந்தியாவில் கரோனா நோய் தொற்று ஆயிரத்தை கடந்தது

1 Min Read

புதுடில்லி, மே 27 கடந்த 2019ல் பரவிய கரோனா தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பின்னர் தடுப்பூசி, கட்டுப்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என பெரும் போராட்டத்திற்குப் பிறகு கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது.

ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நாட்டில் கரோனா தொற்று எண்ணிக்கை தற்போது வரை 1009அய் எட்டியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் 752 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளா, மகாராட்டிரா மற்றும் டில்லி ஆகியவை அடுத்தடுத்து கடந்த ஒரு வாரத்தில் அதிக தொற்றுகளை பதிவு செய்த மாநிலங்களாக உள்ளன.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கேரளாவில் 335 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன.  இதன் மூலம் மொத்த தொற்று எண்ணிக்கை 430 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல மகாராட்டிரா மற்றும் டில்லியில் முறையே 153 மற்றும் 99 புதிய தொற் றுகள் பதிவாகியுள்ளன.

இந்த நகரங்களைத் தொடர்ந்து குஜராத்தில் 83 தொற்றுகள் பதிவாகி யுள்ளன; கருநாடகாவில் 47 தொற்றுகள், உத்தரப்பிரதேசத்தில் 15 தொற்றுகள் மற்றும் மேற்கு வங்கத்தில் 12 தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இதுதொடர்பாக பேசியுள்ள டில்லி முதலமைச்சர் ரேகா குப்தா, தொற்று அதிகரிப்பால் யாரும் பீதியடைய தேவையில்லை என்றும், மருத்து வமனைகள் வசதிகளுடன் தயாராக உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *