புதுடில்லி, மே. 26– பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் கணவனை இழந்த பெண்கள் அந்த பயங்கரவாதிகளுடன் போராடி இருக்க வேண்டும் என பா.ஜனதா எம்.பி. ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு உள்ளார்.
ஆண்களை கொன்று குவித்தனர்
காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப்பயணி கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய பயங்கரவாதிகள் 26 பேரை கொன்று குவித்தனர். இதில் பெண்களை விட்டு விட்டு, அவர்கள் கண் முன்னே கணவர்களை மட்டும் கொடூரமாக சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த பயங்கரம் நிகழ்ந்து ஒருமாதம் கடந்த பின்னரும் அந்த சோக வடுக்கள் ஆறாமல் உள்ளன. இதில் மேலும் வேதனையை ஏற்படுத்தும் வகையில், பா.ஜனதா எம்.பி. ஒருவர் கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. T
பா.ஜனதா எம்.பி. பேச்சு
அரியானாவை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.யான ராம் சந்தர் ஜாங்ரா, பிவானி யில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பஹல்காமில் தங்கள் கண வனை இழந்த பெண்களிடம் துணிச் சலும், மனஉறுதியும் இல்லை. பயங்கரவாதிகளி டம் கை கூப்பி மன்றாடி இருக் கிறார்கள். அதனால்தான் தங்கள் கணவர்களை இழந்திருக்கிறார்கள். கரம் கூப்பியவாறே மடிந் திருக்கிறார்கள். அப்படி மன்றாடினால் பயங்கரவாதிகள் விடமாட்டார்கள். அவர்களுக்கு எதிராக வீராங்கனைகளைப் போல போராடி இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் உயிரிழப் புகள் குறைந்திருக்கும்.சுற்றுலாப் பயணிகள் அக்னிவீரர் பயிற்சியைப் பெற்றிருந்தால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவாக இருந் திருக்கும். இவ்வாறு ராம் சந்தர் ஜாங்ரா கூறினார்.
காங்கிரஸ் கடும் கண்டனம்
அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் கடும் கண்டனம் தெரிவித்து உள்ள காங்கிரஸ் கட்சி, இதுதொடர் பாக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
பா.ஜனதா எம்.பி. ராம் சந்தர்ஜாங்ராவின் கருத்து, மீண்டும் ஒருமுறை பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் அற்ப மனநிலையை அம்பலப்படுத்தி இருககிறது. ஏற்ெகனவே மத்திய பிரதேச துணை முதல்-அமைச்சர் ஜெகதீஷ் தேவ்தா நமது துணிச்சல் மிக்க ராணுவத்தை அவமானப்படுத்தினார். ஆனால் பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்
மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷா நமது வீரமிக்க கர்னலுக்கு எதிராக அநாகரிகமான கருத்துகளை வெளியிட்டார். ஆனால் இன்றுவரை அவரை நீக்கவில்லை. பஹல்காமில் கொலை செய்யப்பட்ட கடற்படை அதிகாரிகளின் மனைவியை சமூகஊடகங்களில் டிரோல் செய்தனர். ஆனால் மோடிஜி அதற்கும் அமைதி காத்தார். மோடிஜி, உங்கள் நரம்புகளில் குங்குமம் பாய்வதாக கூறுகிறீர்கள். அது உண்மையானால் பெண்களின் கண்ணியத்துக்கு எதிராக இந்த மோசமான வார்த்தைகளைப் பேசும் உங்கள் தலைவர்களை நீங்கள் பதவி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
இதே கருத்தை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷும் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார். இத்தகைய அவதூறு கருத்துகளுக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்கவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.