சிறுமியைச் சீரழித்த ராமன் கோவில் பூசாரி கைது!

1 Min Read

பெல்காம், மே 26 கருநாடகா மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் ராய்பாக் தாலுகாவுக்கு உட்பட்ட மேகாலி கிராமத்தில் ராமன் கோவில் பூசாரியாக இருப்பவர் லோகேஸ்வரா மகராஜ்.

இவர், 17 வயது சிறுமி ஒருவரை, வீட்டில் கொண்டு சென்று இறக்கி விடுகிறேன்,லிப்ட் தருகிறேன் என கூறி அவரை காரில் அழைத்துக்கொண்டு ராய்ச்சூரில் விடுதிக்குச் சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

தொடர்ந்து, பாகல்கோட்டில் உள்ள விடுதிக்குக் கொண்டு சென்று மற்றொரு முறை அவரை வன்புணர்வு செய்துள்ளார்.

பின்பு பெலகாவியில் பேருந்து நிலையம் ஒன்றில் அந்தச் சிறுமியை இறக்கிவிட்டார்.

வீட்டுக்குச் சென்ற சிறுமி நடந்ததை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனைத் தொடர்ந்து பூசாரிக்கு எதிராக பாகல்கோட்டில் உள்ள நவநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போக்சோ உள்பட  பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *