புதுடில்லி, மே 24 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (23.5.2025) டில்லி சென்றார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் காங்கிரஸ் கட்சி யின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். இதுகுறித்து அவர், தனது ‘எக்ஸ்’ தள பதிவில், ‘‘சோனியா காந்தி மற்றும் சகோதரர் ராகுல் காந்தி ஆகியோரை சந்திக்கும்போதெல்லாம் குடும்பத்துடன் இருப்பதைப் போன்று உணர்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.
பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டில்லி சாணக்கியா புரியில் தமிழ்நாடு அரசு சார்பில் கட்டப்பட்டுவரும் முக்கிய பிரமுகர் தொகுதி, விருந்தினர் மாளிகை தொகுதி மற்றும் அலு வலர்கள் குடியிருப்புத் தொகுதி ஆகியவற்றை உள்ளடக்கி, 3 அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் 7 மேல் தளங்களைக் கொண்டதாகவும், மொத்தம் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் குறித்த ஆய்வு மேற்கொண்டார். பின்னர், ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டு, புதுடில்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி மருத்துவர் பரமேஸ்வரனை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
இன்று (24.5.2025) காலை பிரதமர் மோடி தலைமையில் நடை பெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றார்.