கும்மிடிபூண்டி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கூட்டம் – புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

1 Min Read

கும்மிடிபூண்டி, நவ. 13- கும்மிடிபூண்டி மாவட்ட பகுத்தறி வாளர் கழக அமைப்புச் கூட்டம் தோழர் டார்வி இல்லம் மிஞ்சூர் சூரியா நகரில் 11.11.2023 சனிக்கிழமை காலை 11 மணி யளவில் பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா.தமிழ்ச் செல்வன் தலைமையில் நடைபெற்றது.

மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வெங்க டேசன், திராவிடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம், மாவட்ட தலைவர் புழல் த.ஆனந்தன் முன்னிலையில் முதல் அமர்வு நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவராக ந.ஜனாதிபதி. மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளராக டார்வி, மாவட்ட துணைத் தலைவராக த.தாஸ், துணைத் தலைவராக சி.லிங்கசெல்வி ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. எதிர்வரும் 19ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் மாநில பகுத்தறிவாளர் கழக கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும், தமிழர் தலைவர் வழிகாட்டுதலின்படி செயல் திட்டங்களை சிறப்பாக செயலாற்ற முடிவு செய்யப்பட்டது. விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு ஏடுகளுக்கு சந்தா சேர்ப்பது என முடிவு செய்யப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *