போர்ப் பதட்டங்களுக்கு மத்தியில் வதந்திகளை நம்ப வேண்டாம்

1 Min Read

மக்களை எச்சரிக்கும் முதலமைச்சர் மான்!

அமிர்தசரஸ், மே 11- இந்தியாவிற்கும் பாகிஸ் தானுக்கும் இடையே அதிகரித்துவரும் போர்ப் பதட்டங்களுக்கு மத்தியில் மக்கள் வதந்தி களை நம்ப வேண்டாம் என்று பஞ்சாப் முதல மைச்சர் பகவந்த் மான் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

மக்கள் வசிப்பிடங் களுக்கு அருகில் வெடி குண்டு, ட்ரோன். ஏவுகணை ஆகியவற்றை கண்டாலோ அல்லது அதன் பாகங்கள் தென் பட்டாலோ அதனருகே விரைந்துச் செல்ல வேண்டாம் உடனடியாக மக்கள் காவல்துறை அல்லது ராணுவத்திற்கு உரிய தகவல் அளிக்கவும்.

அவர்கள் அங்கு வந்து அதைச் செயலிழக்கச் செய் வார்கள். மேலும் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்றுவரும் பதற்ற நிலையைக் கண்டு மக்கள் பீதியடையவோ, வதந்திகளை நம்பவோ வேண்டாம்.

ராணுவம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒரு முறை தகவல் தெரிவித்து வருகிறது. இக்கட்டான சூழல் ஏற்படும் பட்சத்தில் மக்கள் தங்குவதற்கும், உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்க அரசு தயாராக உள்ளது.

இதற்கிடையில், மாணவர் நலனைப் பாதுகாக்கப் பஞ்சாப் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப் படுகிறது.

மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பஞ்சாப் அமைச்சர் கூறுகையில்,

உயர்கல்வித் துறை உத்தரவின்படி, நிறுவனங்கள் விடுமுறை அறிவித்து மாண வர்கள் வீடு திரும்ப அனுமதிக்கலாம் என்றாலும், பாதுகாப்பு, சூழ்நிலை, போக்குவரத்து அல்லது தனிப்பட்ட காரணங்களால், மாணவர்கள் கல்வி நிறுவனங்களை விட்டு வெளியேறக் கட்டாயப் படுத்த வேண்டாம்.

வீடு திரும்ப இயலாத ஒவ்வொரு மாணவர் களுக்கும் உணவு, தங்கும் வசதி என அனைத்து வசதிகளும் வழங்கப்படும்.

விருப்பமின்றி எந்த ஒரு மாணவர்களும் வெளியேற கட்டாயப் படுத்த வேண்டாம் என்று கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *