ஓசூர் பெரியார் சதுக்கத்தில் புரட்சி கவிஞர் பிறந்த நாள் விழா

1 Min Read

ஒசூர், மே 2- ஒசூர் உள்வட்ட சாலையில் தந்தை பெரியார் சதுக்கத்தில் புரட்சி கவிஞர் பாரதிதாசன் 134 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் வனவேந்தன் தலைமையில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணைமேயர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.நிகழ்ச்சியில் பாவலர் கருமலைத்தமிழாழன் புரட்சி கவிஞர் பாரதிதாசன் சிறப்பு குறித்து அவர் இயற்றிய கவிதைகளைப் படித்தார்.

இந் நிகழ்ச்சியில் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் கோ.கண்மணி, ஒன்றிய அமைப்பாளர் பூபதி,பகுத்தறிவாளர் கழகம் மாவட்ட தலைவர் சிவந்தி அருணாசலம், மாமன்ற உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி, இந்திராணி, தமிழ்நாட்டு கல்வி இயக்கம் ஒப்புரவாளன், திமுக மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளர் ஞானசேகரன், மோகன், பாரதி, கார்த்திக் முருகன், ராணி, பிரகாஷ், விக்னேஷ், கவிஞர்கள் முருககுமரன்,ராசு மற்றும் தோழர்கள் கலந்துகொண்டனர்.

திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர்களின் கோரிக்கைகளை ஏற்று புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாளை ஒரு வாரகாலம் அரசு கொண்டாடப்படும் என அறிவிப்பு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும் அனைவர் சார்பிலும் நன்றி தெரிவிக் கப்பட்டது.

முடிவில் பகுத்தறி வாளர் கழகம் மாவட்ட தலைவர் சிவந்தி அருணாசலம் நன்றி தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *