குஜராத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 பதிவு

1 Min Read

சூரத், ஏப்.23 குஜராத் மாநிலம் கட்சு மாவட்டத்தில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மய்யம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

தேசிய நில அதிர்வு ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், கட்சு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 11.26 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 20 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகுகளாக பதிவானது.

இதையொட்டி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலஅதிர்வுகள் உணரப்பட்டன. நிலஅதிா்வுகள் காரணமாக வீடுகள் மற்றும் கட்டடங்களை விட்டு பொதுமக்கள் அச்சத்தில் வெளியேறினா்.

இந்த நிலஅதிர்வால் நல்வாய்ப்பாக உயிரி ழப்புகள் மற்றும் பொருள் சேதம் ஏதும் ஏற்பட வில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *