சத்தீஸ்கரில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீது காரை ஏற்றிக் கொன்ற பா.ஜ.க. பிரமுகர்

1 Min Read

ராய்ப்பூர்,ஏப். 20– சத்தீஸ்கரின் கொண் டகான் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தின் மீது பாஜக பிரமுகர் தனது காரை மோதி காங்கிரஸ் தலைவரை கொலை செய்தார்.

சத்தீஸ்கர் மாநிலம் டோக்ரி குடா பகுதியில் விபத்து நடை பெற்ற தாகவும், விபத்து தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டவரை காவல் துறையினர் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக காவல் துறையினர் கூறுகையில், சத்தீஸ்கரில் கொண்டகான் மாவட்டத்தில் காங்கிரஸ் இளைஞரணி தலைவராகவும், முல்முலா கிராம பஞ்சாயத்தின் தலைவராகவும் இருந்தவர் ஹேமந்த் போயர் (30). இவரும் இவரது உறவினர் பெண் ஒருவரும் இருசக்கர வாகனத்தில் உள்ளூர் சந்தைக்குச் சென்று கொண்டிருந்தபோது. பாஜக பிரமுகரான புரேந்திர கவுஷிக் தனது காரை இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியுள்ளார்.

காயமடைந்தவர்களை உள்ளூர் மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர். அங்குச் சிகிச்சை பலனின்றி போயர் இறந்தார், உறவினரான பெண் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவ்வாறு கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *