சென்னை, ஏப்.19 உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள் ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள் ளனர். எத்தகைய உயர் பொறுப்பில் இருப்பவ ரானாலும் அவர் சட்டத்துக்குக் கட்டுப் பட்டுத் தான் நடக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி யுள்ளார்.
மக்கள் பிரதிநிதி
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டு 75 ஆண்டுகள் கடந்து விட்டன. எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளைச் சிதைத்து, பொதுக் கருத்தாடலில் வலதுசாரிக் கருத்துகளைத் திணிக்க முற்படும் தற்போதைய தீங்கானது ஆளுநர்கள், குடியரசுத் துணைத் தலைவர், அவ்வளவு ஏன் குடியரசுத் தலைவர் உட்பட அரசியலமைப்புப் பதவிகளை அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதில் இருந்து முளைத்த ஒன்றாகும்.
மக்களாட்சியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான் அரசை நடத்த வேண்டும், அலங்கார நியமனப் பதவிகளில் அமர்ந்திருப் பவர்கள் அல்ல. எந்தத் தனி நபரும், அது எத்தகைய உயர் பொறுப்பில் இருப்பவரானாலும் அவர் சட்டத் துக்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும். இதைத்தான் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தீர்ப்பு தவறான வழிமுறையைச் சரிசெய்யும் நகர்வாகும். ஆகவே, இந்த வரவேற்கத்தகுந்த சீர்திருத்த நடவடிக்கை பல ஜனநாயக விரோத சக்திகளை நிலைகுலைய வைத்துள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தற்போதைய தேவை என்பது, இந்தச் சீர்திருத்தம் முழுமையாக நடைமுறைத்தப்படுவதை உறுதிசெய்வதே. இவ்வாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.
திமுக துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்.பி.: ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவர்களின் பங்கு என்ன என்பது குறித்து உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பு சட்ட பிரிவு 142 அய் பயன்படுத்தி சமீபத்தில் தெளிவு படுத்தி உள்ளது. அதில் அரசியலமைப்பு அதிகாரம் என்ற பெயரில் எந்தவொரு தனிநபரும் சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி நிறுவியுள்ளது. இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்த குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: அரசமைப்புச் சட்டத் துக்கு விரோதமாகவும், ஒட்டுமொத்த தமிழ் நாடு மக்களின் உரிமைகளுக்கு எதிராகவும் பேசிய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை தமிழ்நாடே இன்று வன்மை யாகக் கண்டிக்கின்றது, எச்சரிக்கிறது. நீதிமன்றத்தை அச்சுறுத்தும் அவரது பேச்சை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: தமிழ்நாடு ஆளுநரின் சட்டவிரோத செயல் களுக்கு, குடியரசுத் தலைவர் மவுன சாட்சியாக இருந்து விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் குடியரசுத் தலைவரின் அரசியல் சாசன கடமைகளை நினைவூட்டி, அவைகளை நிறைவேற்ற கால வரம்பு நிர்ணயித்திருப்பது அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அரணாகவே அமைந்திருக்கிறது என்பதை குடியரசுத் துணைத் தலைவர் பிடிவாதமாக நிராகரித்து விட்டு, உச்ச நீதிமன்றத்துக்கும், நீதித்துறைக்கும் எதிராகப் பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.