இலங்கை கடற்படையினரின் வன்முறை

Viduthalai
1 Min Read

தமிழ்நாடு மீனவர்கள் படகுகள் மீது
கப்பலை மோதவிட்டு தாக்குதல்: 7 பேர் காயம்

ராமேசுவரம், ஏப். 18- 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கிய நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் நாட்டுப்படகுகள், பைபர் படகுகளில் சென்று வழக்கம்போல் மீன்பிடிக்க அனுமதி உள்ளது.

இந்தநிலையில் பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் இருந்து இன்னாசி முத்து என்பவ ருக்கு சொந்தமான நாட்டு படகு ஒன்றில் இன்னாசிமுத்து (வயது 50), ஆரோக்கிய ஹைடன் (23), யெகு (19), ஆல்பர்ட் (19), களஞ்சியம் (25), கென்னடி (60). சேத்தி (60) ஆகிய 7 மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்று இருந்தனர்.

இவர்கள் 15,4,2025 அன்று இரவில் நடுக்கடலில் மீன்பிடித்தனர். அப்போது ரோந்து கப்பலில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் வேகமாக வந்து நாட்டுப்படகின் மீது மோதியதாக கூறப் படுகிறது. இதில் படகின் முன்பகுதி பலகை சேதம் அடைந்தது.

இலங்கை கடற்படை யினர், நாட்டுப்படகில் ஏறி அதில் இருந்த 7 மீனவர்களையும் கட்டை யால் சரமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர் ரோந்து கப்பலில் அங்கிருந்து சென்றுள்ளனர். உயிர் தப்பிய 7 மீனவர்களும் படகுடன் 16.4.2025 அன்று பாம்பன் வந்தடைந்தனர். சேதமடைந்த நாட்டுப்படகை கரையேற் றினர் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட 7 மீனவர்களிடம் கடலோர காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *