ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவரா? வழக்குரைஞருக்குத் தண்டனை

1 Min Read

அலகாபாத், ஏப்.15 பா.ஜ.க.வின் போட்டோஷாப் வதந்தியை எடுத்துக்கொண்டு நீதிமன்றம் சென்ற வழக்குரைஞருக்கு சிறைத்தண்டன விதித்தது உயர்நீதிமன்றம்.
டில்லியைச் சேர்ந்த வழக்குரைஞர் அசோக் பாண்டேராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் அவரது குடியுரிமையை ரத்து செய்யக் கோரி 2024 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதி தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்தார். அவரது புகார் மனுவை ஏற்க, தேர்தல் அதிகாரி மறுத்துவிட்டார்.

இதனை அடுத்து அவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, வழக்கின் சான்றுகளாக பாஜக அமைப்பினர் நடத்தும் வாட்ஸ் அப் போட்டோஷாப் செய்து வெளியிட்ட போலியான சில சான்றுகளை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அசோக் பாண்டே சமர்பித்திருந்தார்
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீத்பதிகள் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஒருவர் போலியான சான்றுகளை வழக்கின் சாட்சியாக கொடுத்ததற்காக அசோக் பாண்டேவிற்கு ஆறு மாத சிறைத் தண்டனையும், மூன்று ஆண்டு களுக்கு வழக்குரைஞராகப் பணியாற்ற தடையும் விதித்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *