ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த, உச்சநீதிமன்ற தீர்ப்பால் அமலுக்கு வந்துள்ள 10 மசோதாக்கள் விவரம் வருமாறு:
1) சென்னை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா
2) தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
3) தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
4) தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
5) தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
6) தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
7) தமிழ் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
8) தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
9) அண்ணா பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
10) அத்துடன் தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்டத் திருத்த மசோதா
மேலே உள்ள 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதால், இந்த மசோதாக்கள் உடடினயாக அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக, இனிமேல் இந்த பல்கலைக்கழகங்களின் வேந்தராக மாநில முதலமைச்சரே இருப்பார்.
தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களும் செல்லும்! உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

Leave a Comment