பிரியாணி சமைக்க பிளாஸ்டிக் அரிசியா? வீடியோவில் பரவும் செய்திக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு

viduthalai
1 Min Read

சென்னை, ஏப்.8 பிரியாணி சமைக்க பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் குடும்ப செலவுகளை சமாளிப்பதற் காக கணவன், மனைவி என 2 பேரும் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் காலையில் வேலைக்கு புறப்படுவது முதல் அலுவலகம், கம்பெனிகளுக்கு சென்றடைவது வரை பெரும்பாலான இணையர் கடுமையான நேர நெருக்கடியை சந்திக்கிறார் கள். இதுஒருபுறம் இருக்க, பிள்ளைகளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது.
‘பிரிஞ்சி’ கடைகளில் ரூ.20, ரூ.30, ரூ.40 என வெவ்வேறு கட்டணங்களில் பிரியாணி பொட்டலம் போட்டு விற்கப்படுகிறது. மிகவும் குறைந்த செலவில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பசியாறி விடமுடியும் என்பதால் பெரும்பாலானவர்களின் பிரதான தேர்வாகவும் இவை இருக்கின்றன.

இந்தநிலையில், 30 ரூபாய் பிரியாணி சமைப்பதற்காக பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுவதாக ஒரு காட்சிப் பதிவு சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப் பட்டு வருகிறது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிப்பார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில்,”இது முற்றிலும் பொய்யான தகவல். சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வரும் காட்சிப் பதிவில் இருப்பது பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கும் காட்சியல்ல. பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும்போது எடுக்கப்பட்ட வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி வதந்தி பரப்பி வருகிறார்கள்” என்று கூறப் பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *