பட்னா, ஏப். 7- வக்ப் மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்ததால் அய்க்கிய ஜனதா தள (ஜேடியு) கட்சியில் இருந்து மேலும் ஒரு தலைவரும் விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
வக்ப் மசோதா
மக்களவையில் (மார்ச் 3) அதிகாலை வக்ப் திருத்த மசோதா 2024 நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அய்க்கிய ஜனதா தளம் கட்சி வாக்களித்தது. இதனால், கட்சிக்குள் நிர்வாகிகள் மற்றும் தலைமை இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. வக்ப் மசோதா நிறைவேற்றத்தில் ஜேடியு கட்சியின் நிலைப்பாடு குறித்து கட்சியில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
விலகல்
இதனால் விரக்தியடைந்த, தப்ரேஸ் சித்திக் அலிக், முகமது ஷா நவாஸ் மாலிக் மற்றும் முகமது காசிம் அன்சாரி உள்ளிட்ட முஸ்லீம் தலைவர்கள் மூன்று பேரும் கட்சியிலிருந்து விலகிய நிலையில், கட்சியின் முக்கிய தலைவராக எம். ராஜூ நய்யார் என்பவரும் கட்சியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்திருக்கிறார். இது அக்கட்சிக்கு மேலும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ராஜூ நய்யார் தனது பதவி விலகல் கடிதத்தில், “ஜேடியு கட்சி வக்ப் மசோதாவுக்கு மக்களவையில் ஆதரவளித்ததை தொடர்ந்து கட்சியிலிருந்து விலகிக் கொள்கிறேன். முஸ்லீம்களை ஒடுக்க நினைக்கும் இந்தச் சட்டத்துக்கு ஆதரவளித்தது மிகவும் வேதனையளிக்கிறது என்று கூறியுள்ளார்.
வக்ப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு
இஸ்லாமிய சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்
இஸ்லாமிய சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை, ஏப். 7- ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்ப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முஸ்லிம்கள் 4.4.2025 அன்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை தலைமை பள்ளிவாசலான வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசலில் பிற்பகலில் தொழுகை முடித்த முஸ்லிம்கள் அனைவரும் கருப்புப் பட்டை அணிந்து நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு, பள்ளிவாசல் நிர்வாகத் தலைவா் காஜா முகைதீன் தலைமை வகித்தார். பள்ளிவாசல் தலைமை இமாம் முகம்மது பிலால் முன்னிலை வகித்தார்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் வக்ப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராகவும், ஒன்றிய அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினா். மேலும், பள்ளிவாசல் முழுவதும் கருப்புக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. இந்த ஆா்ப்பாட்டம் காரணமாக நேரு பஜார் பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.