பால் உற்பத்தியை பெருக்க தமிழ்நாட்டில் 300 இடங்களில் கன்றுகள் பேரணி

Viduthalai
1 Min Read

சென்னை, ஏப்.7- தமிழ்நாட்டில் பால் உற்பத்தியை பெருக்க கன்றுகள் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த ஆண்டு 300 இடங்களில் கன்று பேரணியை நடத்துவதற்கு பால்வளத்துறை உத்தேசித்துள்ளது.
தேசிய கால்நடை இனப் பெருக்கம் மற்றும் பால்வள மேம்பாட்டுக்காக’ராஷ்டிரிய கோகுல மிஷன்’ என்ற திட் டத்தை ஒன்றிய அரசு கடந்த 2014ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. உள்நாட்டு மாட்டு இனங்களை பாது காத்தல், மேம்படுத்துதல், பால் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரித்தல்,கிரா மப்புற விவசாயிகளின் வாழ் வாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவை இந்த திட்டத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.
ஒன்றிய கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை மூலம் ரூ.2,500 திட் டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசும் கால்நடைகள், பால்வளத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டு அனைத்து மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி யாளர்களுக்கு கலப்பின கிடாரி கன்று வளர்ப்பின் முக்கியத்து வத்தை உணர்த்துவதற்காக வும், பால் உற்பத்தியாளர்களை கன்று வளர்ப்பில் ஊக்குவிப்பதற்காகவும் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவ தற்காகவும் 300 இடங்களில் கன்று பேரணிகளை நடத்துவ தற்கு தமிழ்நாடு அரசின் கால் நடைபராமரிப்பு, பால்வளத்துறை உத்தேசித்துள்ளது.
எந்தெந்த இடங்களில் கன்று பேரணியை நடத்து வது, எத்தனை கன்றுகளை பங்கேற்க வைப்பது? என்பது குறித்து கால்நடை விவசா யிகளுடன் அதிகாரிகள் ஆலோ சித்து முடிவு செய்ய உள்ள னர். இந்த பேரணியில் பங்கேற்கும் கன்றுகளுக்கு குடல் புழு நீக்க மருந்தும். சிறப்பாக பராமரிக்கப்படும் கன்றுகளை தேர்ந்தெடுத்து அதன் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கவும் அதிகாரிகள் உத்தேசித்து உள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *