மனுவாதிகளான இராமாயண பக்தர்கள் துளிசிதாஸ் இராமாயணம் படிக்கச் சொல்வது எதனால் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
மண்டல் கமிஷன் பரிந்துரை அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு – நிறைவேற்றிய அறிக்கையின் 16ஆம் பக்கத்தில் உள்ள சில வரிகளைப் படியுங்கள்.
‘இரகசியம்’ புரியும்!
“Mythology and scriptures were also pressed into service to establish the inherent superiority of the Brahmin and the low social ranking of the Shudras. For instance, Tulsidas states in his Ramayana, that means
Venerate a Brahmin even if he is devoid of all virtue, but not a Shudra even if he is packed with virtue and knowledge.’’
– (மண்டல் கமிஷனிலிருந்து..)
இதன் தமிழாக்கம்:
‘‘ஒழுக்கங் கெட்டவன் பிராமணன் ஆனாலும் அவனை வணங்கு; அதிக ஒழுக்கமுள்ளவன் சூத்திரனானாலும் அவனை வணங்கவே கூடாது’’
அது மட்டுமல்ல.
‘பெண்களும், மேளங்களும் அடிக்கப்படவே உண்டாக்கப்பட்டவை’’
– துளசிதாஸ் இராமாயணம்
மனித தர்மம், சமத்துவம் விரும்புவோரே,
இதுதான் பரப்பப்படுகிறது. மதச் சார்பற்ற ஒரு ஜனநாயகத்தில் இது நியாயமா?
சிந்தியுங்கள் மக்களே!
இராமாயண பக்திப் பரப்பப்படுவதின் நோக்கம் புரிகிறதா?