இலங்கை சிறையில் இருந்த 13 மீனவர்கள் சென்னை திரும்பினர்

viduthalai
1 Min Read

ராமேசுவரம், ஏப்.3 ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து பிப்ரவரி மாதம் கடலுக்குச் சென்ற இரண்டு விசைப் படகுகளை தனித்தனியாக சிறைப்பிடித்து படகுகளிலிருந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த வாரம் இலங்கை மன்னார் நீதிமன்றம் 13 மீனவர்களுக்கு தலா ரூ.2 லட்சத்து 50 அபராதம் விதித்து உத்தரவிட்டது.

13 மீனவர்கள் அபராதத் தொகையை கட்டி விடுதலையடைந்ததால், கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 1.4.2025 அன்று இரவு சென்னை வந்தடைந்தனர். தொடர்ந்து மீன்வளத்துறை அலுவலர்கள் மூலம் 13 மீனவர்களும் தனி வாகனம் மூலம் ராமேசுவரத்திற்கு நேற்று (2.4.2025) காலை அழைத்து வரப்பட்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *