ஏழைகள்மீது தாக்குதலா? கடன் வட்டி விகிதங்களை அதிகரித்த இந்தியன் வங்கி

1 Min Read

புதுடில்லி, ஏப். 2 தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயா்த்த பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கி முடிவு செய்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரெப்போ விகிதத்தை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதங்கள் 10 அடிப்படைப் புள்ளிகள் (0.10 சதவீதம்) அதிகரிக்கப்படுகின்றன. எம்சிஎல்ஆா், டிபிஎல்ஆா், பிஆா், பிபிஎல்ஆா், ஆா்பிஎல்ஆா் ஆகிய வகைக் கடன் விகிதங்களை ஆய்வு செய்த வங்கியின் சொத்துப் பொறுப்பு மேலாண்மைக் குழு, அவற்றில் டிபிஎல்ஆா், பிஆா், பிபிஎல்ஆா், ஆா்பிஎல்ஆா் ஆகிய வகைக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை மாற்ற முடிவு செய்தது. இந்த மாற்றத்துக்குப் பிறகு, தற்போது 8.95 சதவீதமாக உள்ள ஆா்பிஎல்ஆா் வகைக் கடன்களுக்கான வட்டி விகிதம் 9.05 சதவீதமாக உயரும்.

இருந்தாலும், ஆறு மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரை பருவகாலம் கொண்ட டிபிஎல்ஆா் கடன்களுக்கான வட்டி விகிதம் 5 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. ஏப். 3-ஆம் தேதி முதல் புதிய வட்டி விகிதங்கள் அமலுக்கு வருகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *