ராஜஸ்தான் அரசியல் – அசோக் கெலாட் உடன் மோதல் சச்சின் பைலட் கருத்து

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, ஜூலை 9  ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உட னான தனது மோதலை மன்னிக்கவும் மறக்கவும் தயாராக இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் கூறினார். 

ராஜஸ்தானில் கடந்த 2018-இல் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது முதல், முதலமைச்சர் அசோக் கெலாட்டுக் கும் துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் இருந்து வருகிறது. கடந்த 2020இ-ல் முதலமைச்சருக்கு எதிராக சச்சின் போர்க்கொடி தூக்கி யதை தொடர்ந்து துணை முதல மைச்சர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப் பட்டார். 

இந்நிலையில் சச்சின் பைலட் நேற்று (8.7.2023) செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதலமைச்சர் அசோக் கெலாட் உடனான மோதலை மறக் கவும் மன்னிக்கவும் தயாராக இருக் கிறேன். கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சமீபத்தில் சந்தித்தேன்.அவரது வார்த்தைகள் அறிவுரைகளை போலவே இருந்தன. அவர் எப்போதும் விரும்பத்தகாத எந்த வார்த்தையையும் பயன்படுத் துவதை தவிர்த்தார்.

 ராஜஸ்தானில் வரவிருக்கும் தேர்தலில் ஒன்றாக சேர்ந்து போரிட தயாராக உள்ளேன். நான் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது அனைவரையும் அரவணைத்துச் சென்றேன். இப்போது, முதலமைச்சர் கெலாட்டும் அனைவரையும் அழைத்துச் செல்ல முயற்சிக்கிறார். கூட்டு முயற்சியால் மட்டுமே தேர்தலில் வெற்றி முடியும். தேர்தல் வெற்றிக்கு தங்கள் தனிப்பட்ட முயற்சியே போதும் என்று யாரும் கூறிவிட முடியாது.வெற்றி வாய்ப்பே வேட்பாளர் தேர்வுக்கான ஒரே அளவு கோலாக இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு அதிக வாய்ப் பளிக்க வேண்டும். இவ்வாறு சச்சின் பைலட் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *