கற்றல் திறனை மேம்படுத்தும் காலை உணவுத் திட்டம்!

viduthalai
1 Min Read

காலை உணவுத் திட்டம் குழந்தைகளிடம் கற்றல் திறனை மேம்படுத்தி நினைவாற்றலை அதிகரித்து உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், குழந்தைகள் பள்ளிகளில் சிறந்து விளங்குவதற்கு சத்தான உணவுகள் ஊக்கமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். காலை உணவுத் திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்நலக் குறைவு குறைந்திருப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

இரட்டை நாக்கு ஏன்?
எ.வ.வேலு சீற்றம்

தருமபுரியில் சிப்காட் அமைக்க வேண்டும் என்ற பாமக எம்.எல்.ஏ. ஜி.கே மணியின் கோரிக்கைக்கு, அமைச்சர் எ.வ.வேலு காட்டமாக பதிலளித்துள்ளார். திருவண்ணா மலையில் சிப்காட் அமைக்க அரசு தயாராக இருந்தும், அந்த பணிகளை மேற்கொள்ள விடாமல் போராட்டம் என்ற பெயரில் பாமக தடுத்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், தற்போது தருமபுரியில் சிப்காட் அமைக்க கேட்பது பாமகவின் இரட்டை நாக்கை காட்டுவதாகவும் அவர் சாடியுள்ளார்.

ஒரு லட்சம் சேர்க்கையைக் கடந்தது

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை 1 லட்சத்தை கடந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மார்ச் 1ஆம் தேதி தொடங்கிய மாணவர் சேர்க்கை தற்போது வரை 14 வேலை நாட்களைக் கடந்துள்ளது. இதில், ஒரே நாளில் 8,000க்கும் அதிகமான மாணவர்களை அரசுப் பள்ளிகளில் பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். நடப்பாண்டில் 5 லட்சம் மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *