‘திராவிட இயக்கப் படைப்பாளி’ கவிப்பேரரசு வைரமுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

1 Min Read

சென்னை,மார்ச் 17- கவிஞர் வைரமுத்துவின் படைப்புலகம் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

திராவிட இயக்க படைப்பாளி

“கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு மட்டுமின்றி தமிழுக்கும், தமிழ் கவிதைக்கும், இலக்கியத்திற்கும் பெருமை சேர்க்கக்கூடிய நிகழ்வு இது. இலக்கியத்தின் எல்லா வடிவங்களிலும் நுழைந்து வெற்றிமுகம் கண்டவர் வைரமுத்து. சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 7 முறை பெற்ற ஒரே பாடலாசிரியர்.
தமிழ்நாடு அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை 6 முறை பெற்றிருக்கிறார். இதுவரை 7,500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறார். 39 நூல்களை எழுதியுள்ளார்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற இவரது ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவல் இதுவரை 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திரைத்துறையில் உயர்ந்த பிறகும், தேசிய விருதுகளை பெற்ற பிறகும் தன்னை திராவிட இயக்க படைப்பாளியாக அடையாளப் படுத்திக் கொண்டவர் வைரமுத்து.”
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *