சென்னை, மார்ச் 15 கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெர்ற டிஎன்பிஎஸ்சி குருப்-1 மெயின் தேர்வு முடிவு நேற்று (14.3.2025) வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குருப்-1 பதவிகளில் (துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பணிகள்) 90 காலியிடங்களை நிரப்புவதற்கான மெயின் தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 10 முதல் 13-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ள 190 பேரின் பதிவெண்கள் அடங்கிய பட்டியலை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) காணலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.