தமிழ்நாட்டில் மீனவர்களின் தனிநபர் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை

Viduthalai
3 Min Read

மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்

புதுடில்லி, மார்ச் 15– மக்களவையில் தமிழச்சி தங்கபாண் டியன், மீனவர்களின் தனிநபர் வருமானத்தை பெருக்க ஒன்றிய அரசு ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறதா? என்ற கேள்விக்கு ஒன்றிய மீன்வளத் துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தனி நபர் வருமானம்

ஒன்றிய அரசின் மீன்வளத் துறை, தமிழ்நாடு அரசுடன் இணைந்து, தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், அதன் மூலம் மீனவர்கள், மீன் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உள்நாட்டு மீன் வளர்ப்பாளர்களுக்கு புதிய நன்னீர் மீன் குஞ்சு பொரிக்கும் நிலையங்கள், மீன் வளர்ப்பு குளங்கள், நன்னீர் உயிரி குளங்கள், மறுசுழற்சி மீன் வளர்ப்பு அமைப்பு மற்றும் மீன் தீவன ஆலைகள் கட்டுவதற்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
வேகமாக வளரும் மரபணு ரீதியாக மேம்படுத்தப்பட்ட திலாப்பி யாவுக்காகவும் குஞ்சு பொரிக்கும் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. கூண்டு வளர்ப்பு மற்றும் மாற்று வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, ஒருங்கிணைந்த நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டத்தில் அரசு ரூ. 11.08 கோடியை ஒதுக்கியுள்ளது.

கடல் துறையில், தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் சுமார் 2,000 மீனவ குடும்பங்கள் கடற்பாசி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளன. இது மீனவப் பெண்களுக்கு மாற்று வருமான ஆதாரமாக நிரூபிக்கப் பட்டுள்ளது. குளிர்பதன வசதிகளில், அறுவடைக்குப் பிந்தைய இழப்பைக் குறைப்பதற்கும் மீனவர்களின் வருமா னத்தை அதிகரிப்பதற்கும், தனிமைப்படுத்தப்பட்ட வாகனங்கள், குளிர்பதன வாகனங்கள், குளிர் பெட் டிகள் கொண்ட இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்கள், நவீன மீன் சில்லறை சந்தைகள் வழங்கப்பட்டு உள்ளன.
மீன்வளத் துறைக்கான உட் கட்டமைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, இந்திய அரசின் மீன்வளத் துறை, ‘மீன்வளர்ப்பு மற்றும் மீன்வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி’ என்ற பிரத்யேக நிதியை உரு-வாக்கியுள்ளது. இதன் மொத்த நிதி அளவு ரூ.7,522.48 கோடி ஆகும். இதில் மீன்வள உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஆண்டுக்கு 3 சதவீதம் வரை வட்டி மானியம் வழங்கப்படுகிறது. மேற்படி திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசுக்கு ரூ.1573.73 கோடி திட்டச்செலவில் 64 திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

மேலும், கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் கீழ், ரூ.1664.39 கோடி திட்டச்செலவில் 96 திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஒன்றிய அரசின் மீன்வளத்துறை, தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மூலம், பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்-பதா யோஜனா திட்டத்தின் கீழ், தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களி லும் குழு விபத்து காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் முழு காப்பீட்டு பிரீமியத் தொகை-யும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளால் செலுத்தப்படுகிறது. பயனாளியின் பங்களிப்பு எதுவும் இல்லை. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டுத் திட்டத்தில் இறப்பு அல்லது நிரந்தர மொத்த உறுப்பு செயலிழப்பிற்கு ரூ.5,00,000, நிரந்தர பகுதி உறுப்பு செயலின்மைக்கு ரூ.2,50,000 மற்றும் (விபத்து ஏற்பட்டால் ரூ.25,000 மற்றும் மருத்துவ-மனைசெலவுகள் அடங்கும்.
கடந்த மூன்று (2021––-2022 முதல் 2023-20–24 வரை) மற்றும் நடப்பு நிதியாண்டில் (2024–-2025) 131.30 லட்சம் மீனவர்க-ளுக்கு இந்த திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 32.82 லட்சம் மீனவர்கள் காப்பீட்டுத் தொகை பெற்று உள்ளனர். இதன் விளைவாக, இன்றுவரை 1710 கோரிக்கைகளில் 1047 கோரிக்கைகள் தீர்க்கப்பட்டுள்ளன. கோரிக்கை தீர்க்கப்பட்ட தொகை ரூ. 52.13 கோடி ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *