ஆஸ்திரேலியா நாட்டின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் சிட்னி நகரில் உள்ள SBS வானொலிக்கு ஆசிரியர் அவர்கள் பேட்டியளித்தார். பேட்டி எடுப்பவர்கள் ரேமன் செல்வராஜ் மற்றும் குலசேகரம் சஞ்சயன். உடன் சென்றவர்கள் பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத் தலைவர் அண்ணாமலை மகிழ்நன், துணைத்தலைவர் டாக்டர் ஆரூண், கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி மற்றும் மாணவர் புவனா. ரேவன் செல்வராஜ் அவர்களுக்கு ‘‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?’’, ‘‘கற்போம் பெரியாரியம்’’ ஆகிய நூல்களை வழங்கினார் தமிழர் தலைவர் ஆசிரியர்.