பெரியாரை உலகமயமாக்கும் திட்டத்தில் தமிழர் தலைவர் ஆஸ்திரேலியா பயணம்!

1 Min Read

தமிழர் தலைவர் ஆஸ்திரேலியா நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். சுயமரியாதை இயக்க நூற்றாண்டில் சிட்னி, பிரிஸ்பேன், கேன்பெர்ரா, மெல்போர்ன் போன்ற நகரங்களில் நடைபெறவுள்ள கருத்தரங்குகளில் பங்கேற்க உள்ளார். இந்நிகழ்ச்சிகளுக்காக ஆஸ்திரேலியா சிட்னி விமான நிலையத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி இன்று (12.3.2025) சென்றடைந்தார்.

அவரை விமான நிலையத்தில் ஆஸ்திரேலியா பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் தலைவர் அண்ணாமலை மகிழ்நன், துணைத் தலைவர் டாக்டர் ஹாரூன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து அன்போடு வரவேற்றனர். உடன்: கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, அ.கபிலன், கோகுல், செயற்குழு உறுப்பினர் பொன்ராஜ், இனியரசன், ரேகா இனியரசன், குழந்தைகள் நெறியா, தமிழ் ஈவெரா ஆகியோர் உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *