அனைத்துக் கட்சி கூட்டத்தை அரசியலாகப் பார்க்கக் கூடாது!

Viduthalai
1 Min Read

நாகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாகை, மார்ச் 3 தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து கூட்டப்பட்டுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தை அரசியலாகப் பார்க்கக்கூடாது என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இன்று (3.3.2025) நாகையில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறிய தாவது:

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
இதில் எந்தக் கட்சியும் கவுரவம் பார்க்க வேண்டாம். கண்டிப்பாக கலந்து கொள் ளுங்கள்.
அனைத்துக் கட்சி கூட்டத்தை அரசியலாகப் பார்க்கக் கூடாது.
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கப் பார்க்கி றது ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி.
பிள்ளைப்பேற்றை தள்ளிப் போடாமல் குழந்தையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
மக்கள்தொகை அதி கரித்தால்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும் என்று திருமண விழாவில் மணமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுரை கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *