மும்மொழிக் கொள்கை?

viduthalai
1 Min Read

பிரகாஷ்ராஜ் பதிவு!
அப்படி என்ன பதிவு!!

சென்னை,பிப்.23- மும்மொழிக் கொள்கை ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் மிகப்பெரிய போராக உருவெடுத்துக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். அப்படியாக திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ் அவருடைய கருத்தினை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார் இது பாஜகவினரை கோபமடைய செய்திருக்கிறது.

பிரகாஷ்ராஜ் பதிவிட்டிருக்கும் கருத்து பின்வருமாறு :-

உங்களுக்கு ஹிந்தி தெரியும் என்பதால் நீங்கள் ஹிந்தியில் பேசுகிறீர்கள், அதற்காக எங்களையும் ஹிந்தியில் பேச வேண்டும் என கட்டாயப்படுத்துவது முறையானது அல்ல என தெரிவித்திருக்கிறார். மேலும், ஹிந்தியில் நாங்கள் பேச வேண்டும் என நீங்கள் கூறுவதற்கு காரணம் உங்களுக்கு ஹிந்தி மட்டும் தான் தெரியும் என்றும் இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது என்றும் திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ் தமிழில் பதிவிட்டு இருக்கிறார்.

பிஜேபியின் அதீத கோவத்திற்கு காரணம் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தார் என்றால் முன்பெல்லாம் ‘கோ பேக் மோடி’ என்று கூறினோம். ஆனால், இனிமேல் தமிழ்நாட்டிற்கு மோடி வருகிறார் என்றால் ‘கெட் அவுட் மோடி’ என்று சொல்வோம் என தெரிவித்திருந்தார்.

இதன் பின் இந்த கெட் அவுட் மோடி என்பது ட்ரெண்டிங் ஆன ஹாஷ் டேகாக மாறிவிட்டது. இவ்வாறு மும்மொழிக் கொள்கை குறித்து போராடி வரும் சூழலில் பிரகாஷ்ராஜ் அவர்களும் தமிழ்நாடு அரசுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்திருப்பது பாஜகவை மறைமுகமாக எதிர்ப்பதாக இருப்பதால் பாஜகவினர் பிரகாஷ்ராஜினுடைய பதிவிற்கு கடுப்பாகி உள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *