மகாராஷ்டிரா இளம்பெண் பிரன்ஜால் பாட்டீல் இள வயதிலேயே பார்வையை இழந்தார். மனம் தளராத அவர், பிரெய்லி, ஸ்கிரினிங் தொழில்நுட்பம் மூலம் கல்வி கற்றார். 2016இல் ரயில்வேயில் முதல் முயற்சியில் வேலை கிடைத்தபோதும், நிராகரிக்கப்பட்டார். இருப்பினும் அவர், 2017இல் அய்.ஏ.எஸ்.சில் தேர்வெழுதி நாட்டிலேயே 124 ஆவது ரேங்க் வந்தார். இதன்மூலம் நாட்டில் முதல் பார்வையற்ற அய்.ஏ.எஸ் அதிகாரி எனும் பெருமை பெற்றார்.