காந்தி, நேரு புத்தகங்கள் வைக்கக்கூடாதாம்!

1 Min Read

ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பு மிரட்டல்

டேராடூன்,பிப்.18- உத்தராகண்ட்டில் ‘கிரியேட்டிவ் உத்தராகண்ட்’ என்ற அமைப்பு ஆண்டுதோறும் புத்தகக் காட்சி நடத்தி வருகிறது. இந்தப் புத்தகக் காட்சியை டேராடூனில் உள்ள அரசுப் பள்ளி, ராம்லீலா மைதானம், எச்என்பி கர்வால் மத்திய பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் நடத்த கடந்த 2 மாதங்களாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
முதலில் அனுமதி அளித்தவர்கள் பிறகு காரணம் கூறாமல் அனுமதியை ரத்து செய்தனர்.

இது குறித்து புத்தகக் காட்சி ஒருங்கிணைப்பாளர் ஹேம் பந்த் கூறுகையில், ‘‘அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பின் பிரதிநிதிகள் எங்களிடம் காந்தி மற்றும் நேரு பற்றிய புத்தகங்கள் விற்பனைக்கு தகுதியற்றவை என கூறினர். புத்தகக் காட்சிக்கான அனுமதியை ரத்து செய்யும்படி அவர்கள் அனைவருக்கும் அழுத்தம் கொடுக்கின்றனர்’’ என்றார்.
முன்னதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவு காந்தி, நேரு குறித்த புத்தகங்கள் இந்திய கலாச்சாரத்தை கிண்டல் செய்யும் நேருவை முன்னிருத்தி எழுதியுள்ளது. ஆகவே அந்த நூல்கள் விற்பனைக்கு வைக்கக் கூடாது என்று தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *