16.2.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தெலங்கானா அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ராகுல் பாராட்டு; நாடு தழுவிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு இது வலு சேர்க்கும் என கருத்து.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* உ.பி. கும்பமேளாவுக்கு செல்வதற்காக டில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலி.
தி இந்து:
* பிரதமர் மோடி குறித்து கார்ட்டூன் வெளியிட்டதை அடுத்து, விகடன் வலைத்தளம் முடக்கம்.
தி டெலிகிராப்:
* டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் நாடு கடத்தப்படும் இரண்டாவது இந்தியர் குழுவாக, 119 சட்டவிரோத இந்திய குடியேறிகளை ஏற்றிச் செல்லும் அமெரிக்க விமானம் இன்று அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கும். பஞ்சாப் முதலமைச்சர் எதிர்ப்பு. டில்லி விமான நிலையம் செல்லாமல் இங்கு தரையிறக்கம் செய்து பஞ்சாப் மக்களை அவமானப்படுத்துகிறது மோடி அரசு என குற்றச்சாட்டு.
.- குடந்தை கருணா