ஈரோடு, பிப். 15- ஈரோடு மாவட்டம் பெ.மேட்டுப்பாளையம் கழகப் பொதுக் குழு உறுப்பினர் பாட்டுசாமி – மல்லிகா இணையரின் மகள் டாக்டர் தங்கமலர், கள்ளக்குறிச்சி மாவட்டம் மலையனூர் டாக்டர் விக்னேஷ் ஆகியோர் மணவிழா கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் 12.2.2025 அன்று காலை 9 மணி அளவில் ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.
மணவிழாவிற்கு தலைமைச் செயற்குழு உறுப்பினர் த.சண்முகம், ஈரோடு மாவட்ட கழகத் தலைவர் நற்குணன், கோபி மாவட்ட கழகத் தலைவர் சென்னியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோபி மாவட்ட கழக செயலாளர் குணசேகரன், ஈரோடு மாவட்ட கழக செயலாளர் மணிமாறன், மாவட்ட காப் பாளர் சிவலிங்கம், மாவட்ட துணைத் தலைவர் பொன் முகிலன், மாவட்ட துணைத் தலைவர் தேவராஜ், அந்தியூர் ஒன்றிய செயலாளர் கோவிந்தன், ஈரோடு மாநகர செயலாளர் காமராஜ், சுயமரியாதைத் திருமண நிலைய பொறுப்பாளர் சத்தியமூர்த்தி, கே.வி.ஆர் ராஜா சத்தியமூர்த்தி, மகளிரணி தோழர்கள் செல்வி, மதிவதி, கலைச் செல்வி, கண்ணம்மா ஆகியோர் மண விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மிகவும் சிறப்பாகவும், சிக்கனமாகவும், கொள்கை பரப்புரை நிகழ்வாகவும் திருமணம் நடைபெற்றது. நிறைவாக மணமகள் டாக்டர் தங்க மலர் நன்றி கூறினார்.
பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றபொதுக்குழு உறுப்பினர் அ.பாட்டுசாமி இல்ல மணவிழா!

Leave a Comment