புதுடில்லி, பிப். 14- ஒருவரை சிறையில் வைப்பதற்காக பணபரி வர்த்தனை வழக்கை அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்துவதாக கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், குற்றஞ் சாட்டப்பட்டவருக்கு உட னடியாக ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
வழக்கு ஒன்றில் குற்றச்சாட்டு ரத்து செய்யப்பட்ட பின்பும் குற்றம் சாட்டப்பட்டவரை அமலாக்கத்துறை சிறையில் வைத்திருந்ததுடன் அவருக்கு ஜாமீன் வழங் கவும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 12.2.2024 அன்று விசாரணைக்கு வந்தது.
உடனடி ஜாமீன்
அப்போது அமலாக்கத் துறை சார்பாக ஆஜரான வழக்குரைஞர்கள், செசன்ஸ் நீதிமன்றம் குற்றத்தை ரத்து செய்து உத்தரவிட்டது செல்லாது என்று வாதிட்டனர். பின்னர் அது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவை இன்னும் எழுத்து மூலம் வெளியிடவில்லை என்று வாதிட்டனர்.இந்த வாதங்களை நிரா கரித்த உச்சநீதிமன்றம், ஒரு வரை சிறையில் வைத்திருப்பதற்காகவே பணப்பரிவர்த்தனை சட்டத்தை அமலாக்கத் துறை தவறாக பயன்படுத்துவதாக அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.அதோடு நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு சம்பந்தப்பட்ட நபரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் வைத்திருந்ததை ஏன் என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், அவருக்கு உடனடியாக ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.