காவல்துறையினரின் துரிதமான நடவடிக்கையால் ரூ.6 கோடி கேட்டு கடத்தப்பட்ட மருத்துவர் விடுவிப்பு

1 Min Read

பெங்களுரு, ஜன. 29- கருநாடக மாநிலம் பெல்லாரியை சேர்ந்த மருத்துவர் சுனில் குப்தா (45). இவர் 27.1.2025 அன்று காலையில் சூரியநாராயணபுராவில் நடைப்பயிற்சி மேற்கொண்ட போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்தியது.

கடத்தல்காரர்கள் சுனில் குப்தாவின் சகோ தரரும் பெல்லாரி மதுபான விற்பனையாளர் சங்கத்தின் தலைவருமான வேணுகோபால் குப்தாவை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டனர்.அப்போது, ”உங்களின் சகோத ரரை விடுவிக்க வேண்டுமானால் மாலை 6 மணிக்குள் ரூ. 6 கோடி தர வேண்டும். அதில் பாதி தங்கமாகவும், மீதி ரொக்கமாகவும் தர வேண்டும்” என நிபந்தனை விதித்தனர்.

துரித நடவடிக்கை

இதனால் அதிர்ச்சி அடைந்த வேணுகோபால் குப்தா, உடனடியாக பெல்லாரி காவல்துறையினரினர் புகார் அளித்தார். இதையடுத்து காவல்துறையினர் மருத்துவர் சுனில் குப்தா கடத்தப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அவர் காரில் கடத்தப்பட்டது உறுதியானதை தொடர்ந்து, மாவட்ட எல்லைகளை கண்காணிக்குமாறு காவல்துறையினருருக்கு உத்தரவிட்டனர்.

குறிப்பாக கடத்தல்காரர்கள் வெளிமாநிலங் களுக்கு தப்பி செல்லாமல் தடுக்கும் வகையில் பலத்த காவல் கண்காணிப்பு போடப்பட்டது. இதையடுத்து கடத்தல்காரர்கள் எங்கும் தப்பி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே பெல்லாரி நகரின் ஒதுக்குப்புறமான ஒரு கட்டிடத்தில் மருத்துவர் சுனில் குப்தாவை தனிமையில் விட்டுவிட்டு கடத்தல்காரர்கள் இரவு 8.30 மணியளவில் தப்பி ஓடினர். அ ப்போது சுனில் குப்தாவின் கையில் இருந்த ரூ.300-அய் மட்டும் பறித்துக்கொண்டு, பேருந்தில் ஏறி சென்றனர். இதையடுத்து காவல்துறையினர் மருத்துவர் சுனில் குப்தாவை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *