புதுடில்லி,ஜன.21- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
2019 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கொலைக் குற்றவாளி என்று ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.
ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிராக ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் பாஜக தொண்டர் நவீன் ஜா என்பவர் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.
விசாரிக்கக் கூடாது
இந்த நிலையில், ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையை தடை செய்யக் கோரியும், வழக்கை தள்ளுபடி செய்யக் கோரியும் ராகுல் காந்தி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர் அல்லாத ஒருவர் எப்படி புகார் அளிக்க முடியும் என்று ராகுல் காந்தி தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கை விசாரிக்கக் கூடாது என்று விசாரணை நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.