புதுடில்லி, ஜன.18 தலைநகர் டில்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின் வெளியே புறநோயாளிகள் தங்கி யிருக்கும் பகுதியை காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பார்வையிட்டார். அங்குள்ள நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் நடைபாதைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் படுத்திருந்த எய்ம்ஸ் நோயாளிகள், அவர்களின் உறவினர்களுடன் உரையாடினார்.
பாதிப்பு
அந்த ஒளிப்படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அதில், ‘நோயின் பாதிப்பு, கடுமையான குளிரில் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். ஆனால் ஒன்றிய, டில்லி அரசுகள் உணர்ச்சியற்ற நிலை யில் உள்ளன. எய்ம்ஸுக்கு வெளியே நோயாளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்தேன்; அவர்கள் சிகிச்சைக்காக தொலைதூரத்திலிருந்து வந்துள்ளனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் சாலைகள், நடைபாதைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் அவர்கள் படுத்துத் தூங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
ஒன்றிய அரசும், டில்லி அரசும் மக்க ளுக்கு தேவையான வசதி களை செய்து கொடுப்பதில் தோல்வியடைந்துள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.