பெரியார் பெருந்தொண்டரின் உடற்கொடை

viduthalai
1 Min Read

மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பட்டினம், திருவள்ளுவர் நகரில் வசித்த பெரியார் பெருந்தொண்டர், ஓய்வுபெற்ற ஆசிரியர் க. சுப்பையன் 15-01-2025 அன்று காலை இயற்கை எய்தினார். அவரது விருப்பப்படி மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடை அளிக்க அவரது துணைவியார் மகன்கள் திருமாவளவன், இங்கர்சால், இளந்திரையன் ஆகியோர் விரும்பியும் உறவினர்கள் தலையீட்டால் தடுக்கப்பட்டபோது, மயிலாடுதுறை மாவட்ட கழக தலைவர் கடவாசல் குணசேகரன், சீர்காழி ஒன்றியத் தலைவர் சந்திரசேகரன், கொள்ளிடம் ஒன்றியத் தலைவர் பாண்டியன், த.பெ.தி.க. மாவட்ட தலைவர் பரசுராமன், செயலாளர் பெரியார் செல்வம், தோழர்கள் பார்த்திபன், பாலச்சந்திரன், ராமமூர்த்தி ஆகியோர் சுப்பையனின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தாருடன் பேச்சு வார்த்தை நடத்தியபின், அவரது உடல் எந்த மத நிகழ்வுகளுமின்றி தன்னார்வலர் சிதம்பரம் ராமச்சந்திரன் உதவியோடு சென்னை, மதுரவாயல், சிறீலலிதாம்பிகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொடையாக அளிக்கப்பட்டது. கழகத்தோழர்களின் உணர்ச்சி மிக்க வீரவணக்க முழக்கங்களோடு நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தந்தை பெரியார் தொண்டர்களின் முயற்சியினையும் , பணிகளையும் பாராட்டினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *