லக்னோ, ஜன.11 பாஜக ஆளும் மாநிலங்கள் குற்றச் செயல்களின் கூடாரம் என்பது நாடறிந்த விஷயம் ஆகும். இந்தக் கூடாரத்தின் தலைமையகமாக உத்தரப்பிரதேச மாநிலம் உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் இல்லாத நாள்களே இல்லாத சூழல் உள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தின் முக்கிய நகரான மீரட்டில் 5 பேர் அடங்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 8 ஆம் தேதியிலிருந்து காணாமல் போனதாக பக்கத்து வீட்டார் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர் காணாமல் போயிருந்த குடும்பத்தி னரின் பூட்டியிருந்த வீட்டின் கூரை வழியாக உள்நுழைந்த போது 5 பேரும் உயிரற்ற உடல்களாகக் கிடப்பது தெரிய வந்தது.
உயிரிழந்தவர்களின் 3 பெண் குழந்தைகளும் (10 வயதிற்குட் பட்டவர்கள்) பெட்டிக்குள் உயி ரிழந்த நிலையில் கிடந்தனர். உயிரிழந்து கிடந்த 5 பேரின் தலை யிலும் பலத்த காயம் இருப்பதும் தெரியவந்தது. தலையில் பல மாக தாக்கியதால் 5 பேரும் உயிரி ழந்துள்ளனர் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. உடற்கூராய்வுக்காக 5 பேரின் உடல்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் அறிக்கை வெளிவந்தவுடன்தான் உண்மை தெரிய வரும் என்று மீரட் மாவட்ட கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டது போல பலத்த காயங்கள் ஏற் பட்டுள்ளன. விரோதம், திருட்டு எதுவென்றாலும் சரி 10 வயதிற்குட்பட்ட 3 குழந்தைகளின் தலை நசுங்கும் அளவிற்கு கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.