வினை தீர்ப்பவனா விநாயகன்? அம்பத்தூர் விநாயகர் கோயிலில் 5 வெண்கல சிலைகள் திருட்டு

Viduthalai
1 Min Read

சென்னை, ஜன.8 அம்பத்தூர் பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் நள்ளிரவில் கதவை உடைத்து, 5 வெண்கலச் சிலைகளை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அம்பத்தூர், கிருஷ்ணாபுரம், தாகூர் தெருவில் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீவினை தீர்த்த விநாயகர் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் வழக்கம்போல் நேற்று முன்தினம் பூஜை முடிந்து, அர்ச்சகர் சுப்பிரமணி கோயில் கதவுகளை பூட்டி விட்டு சென்றார். இந்நிலையில், நேற்று காலை கோயிலின் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது.
இதுகுறித்து, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், கோயில் நிர்வாகி திருநீலகண்டன், கோயிலுக்கு விரைந்து சோதனை செய்தார்.

அச்சோதனையில், கோயிலில் இருந்த விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, நடராஜர் ஆகிய 5 வெண்கலச் சிலைகள் மற்றும் உண்டியல் பணம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து, திருநீலகண்டன் அளித்த புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, கோயில் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, சிலைகளை திருடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *