வினை தீர்ப்பவனா விநாயகன்? அம்பத்தூர் விநாயகர் கோயிலில் 5 வெண்கல சிலைகள் திருட்டு

1 Min Read

சென்னை, ஜன.8 அம்பத்தூர் பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் நள்ளிரவில் கதவை உடைத்து, 5 வெண்கலச் சிலைகளை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அம்பத்தூர், கிருஷ்ணாபுரம், தாகூர் தெருவில் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீவினை தீர்த்த விநாயகர் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் வழக்கம்போல் நேற்று முன்தினம் பூஜை முடிந்து, அர்ச்சகர் சுப்பிரமணி கோயில் கதவுகளை பூட்டி விட்டு சென்றார். இந்நிலையில், நேற்று காலை கோயிலின் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது.
இதுகுறித்து, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், கோயில் நிர்வாகி திருநீலகண்டன், கோயிலுக்கு விரைந்து சோதனை செய்தார்.

அச்சோதனையில், கோயிலில் இருந்த விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, நடராஜர் ஆகிய 5 வெண்கலச் சிலைகள் மற்றும் உண்டியல் பணம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து, திருநீலகண்டன் அளித்த புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, கோயில் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, சிலைகளை திருடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *