ஆருத்ரா தரிசனம் – கனகசபை மேடைமீது ஏறிப் பக்தர்கள் தரிசனம்

Viduthalai
1 Min Read

திமிர் பிடிப்பார்களா தீட்சதர்கள்?

சிதம்பரம், ஜன.8 சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம் 12-ஆம் தேதியும், வழிபாடு 13-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்த நேரங்களில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபாடு செய்ய பாதுகாப்பு வழங்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சார் ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபாடு செய்ய தமிழ்நாடு அரசு ஆணை பிறபித்ததன் அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் தொடர்ந்து கனகசபை மீது ஏறி வழி பாடு செய்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த ஆண்டு ஆருத்ரா விழாவின் முக்கிய 4 நாட்கள் கனகசபை மீது ஏறி வழிபாடு செய்ய கோயில் தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை என்ற புகார் எழுந்ததன் அடிப்படையில் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசா ரணை நடைபெற்றது.

விசாரணை முடிவில் ஆறுகால பூஜையை தவிர்த்து மற்ற நேரங்களில் கனசபை மீது ஏறி வழிபாடு செய்யலாம் என தீட்சிதர்கள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த வழக்கு முடிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆருத்ரா விழா தொடங் கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 12-ஆம் தேதியும், வழிபாடு 13-ஆம் தேதியும் நடை பெற்றவுள்ளது.
இந்த விழாவின் போது பக்தர்கள் பாதுகாப்பாக கனசபை மீது ஏறி வழிபாடு செய்ய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் சார் ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *